Friday, May 30, 2014



நூறுமுறை பிறந்தாலும் 
நூறுமுறை இறந்தாலும் 
உனைப் பிரிந்து வெகுதூரம் - நான் 
ஒருநாளும் போவதில்லை 
உலகத்தின் கண்களிலே 
உருவங்கள் மறைந்தாலும் 
ஒன்றான உள்ளங்கள் 
ஒருநாளும் மறைவதில்லை! 

ஓராயிரம் பார்வையிலே 
உன் பார்வையை நான் அறிவேன் 
உன் காலடி ஓசையிலே 
உன் காதலை நான் அறிவேன் 

இந்த மானிடக் காதலெல்லாம் 
ஒரு மரணத்தில் மாறி விடும் 
அந்த மலர்களின் வாசமெல்லாம் 
ஒரு மாலைக்குள் வாடி விடும் 
நம் காதலின் தீபம் மட்டும் 
எந்த நாளிலும் கூட வரும் 

இந்த காற்றினில் நான் கலந்தேன் 
உன் கண்களை தழுவுகின்றேன் 
இந்த ஆற்றினில் ஓடுகின்றேன் 
உன் ஆடையில் ஆடுகின்றேன் 
நான் போகின்ற பாதையெல்லாம் 
உன் பூமுகம் காணுகின்றேன்

No comments :

Post a Comment