Labels
கவிதைகள்
ஹைக்கூ கவிதைகள்
கதைகள்
Friday, May 30, 2014
பிஞ்சுக் குழந்தைகளின் பஞ்சுக் கால்கள்,..........
முகத்தைத் தீண்டுவது போல,..........
மனதுக்குப் பிடித்தவர்கள் எல்லாம்,..........
நெஞ்சுக்குள் நினைவை மீட்டுகிறார்கள்..........
உன்னோடு நான் கொண்ட காதல்.........
எதற்காக எனத் தெரியவில்லை.........?
"எனை ஈர்த்தது"..........
உன்னிடத்தில் எதுவென்றும் புரியவில்லை..........
கண்டதும் காதல் வரக் காரனமும் தெரியவில்லை.........
உனக்காக எல்லாரையும் இழந்தேன்.........
நீ என்னை இழப்பாய் என்று தெரியாமல்........!!!
தினமும் என்னைப் பற்றி நீயும்
உன்னைப் பற்றி நானும்
நலம் விசாரித்து சிதறிச்செல்லும்
புன்னகையின் மிச்சங்களில்தான் இன்னும்
சிரித்துக்கொண்டு இருக்கின்றன
சாலையோரப் பூக்கள்........
உனக்கான காத்திருப்பின் இடைவெளிகளில்
நழுவிப்போன சந்திப்புகளை மீண்டும்
மெல்ல சிறை செய்கிறது
நம் நட்பின் ஞாபகங்கள்……
"தா" என்று கேட்காமல் கொடுத்தலில் தொடங்கி,
"வலி" என்று சொல்லுமுன் விழிகள் அழுது
உனக்காக நானும், எனக்காக நீயுமாய்
உறவாடிய நட்பின் இனிய கணங்களில்
மகிழ்ச்சியாய் கடந்துபோனது - காயப்படாமல்
நமது உறவின் முதல் வருடமும்
பாதி ஓவியம் தீட்டி
களைத்துப் போன
தூரிகையின் பெரு மூச்சாய்
எப்பொழுதும் நமது மறு
சந்திப்பை பற்றிய உடன்படிக்கைகள்……
Older Posts
Home
Subscribe to:
Comments ( Atom )