Thursday, May 29, 2014




என்ன பிழை செய்தோம்...... ? ? ? 
பணம் என்ற காகிதத்தால் தினம் 
மனம் நொந்து வாழ்கிறோம் ! 
கடன் இன்னும் இருப்பதால் ஏனோ 
மீண்டும் பணம் தேட நினைக்கிறோம்
நம்மை அறியாமல் வழிந்தோடும் கண்ணீர்த் துளிகளை
துடைத்துக் கொள்கிறோம் - ஆனால் 
அறிந்தே உருவாகும் ஆசைகளை மட்டும் 
ஏனோ துடைக்க மறுக்கிறோம்..... 
வாழ்வதாய் எண்ணி ..... 
வாழ்க்கையின் முகவரியை 
தொலைத்துக் கொண்டிருக்கிறோம் 
பணத்தின் முகவரி கிடைத்துவிட்டதாக எண்ணி 
நாம் இழந்த வசந்தம் தான் கிடைத்திடுமோ....... 
பணத்தால் அடைந்த காயம் தான் ஆறிடுமோ....... ? ? ?

No comments :

Post a Comment