மாலை நேரம்....... !
மணி ஐந்து....... !
கடல் மீது கொண்ட காதலால்
கடற்கரையை கட்டியணைத்துக் கொண்டிருந்தது....... !
கடல் அலை.......
அந்த கடற்கரையோரம்
அவளுக்காய் காத்திருந்தேன்....... !
நான்......
எப்போதும் எனக்கு முன்னே வந்து
எனக்காக காத்திருப்பவளை
இன்று ஏனோ - நான் வந்து
20 நிமிடமாகியும் காணவில்லை....... !
யோசித்துக்கொண்டிருந்த
அடுத்த ஐந்தாவது நிமிடத்தில்
அவள் வந்தாள்....... !
முழு நிலவாய் மின்னும் - அவள்
முகத்தில் இன்று
பிறை நிலவாய் ஏதோ.......
குறை தெரிந்தது....... !
என் பக்கத்தில் அமர்ந்து
பல கதைகள் சொல்பவள்......
இன்று ஏனோ
இடைவெளி விட்டு நின்றாள்....... !
எல்லாமே
எனக்கு புதிதாயிருந்தது........ !
அவள் முகத்தையே
பார்த்து நின்றேன்........ !
அவள் கண்களுக்குள்
கண்ணீர்த்துளி....... !
என் இதயம் இப்போது
மௌனமாய் அழுதது....... !
கண்ணீர்த் துளிகளுக்கு
காரணம் கேட்டேன்........ !
மௌனமே பதிலாய் கிடைத்தது........ ! !
இன்னொருமுறை கேட்டேன்.......!
இப்போதும் மௌனமே பதிலானது........ ! !
அரைமணி நேரம்
அதே மௌனம்....... !
அதற்குள் ஆயிரம் முறை செத்துப்பிழைத்தது........ ! !
என் இதயம்........
அரைமணி நேரம் கழித்து
அவள் வாய் திறந்தாள்........ !
என்னை நீ
மறந்துவிடு என்றாள்....... !
மறுத்தேன் நான்....... !
நீ தான் என் உயிர் என்றவள் - இப்போது
நீங்கிப்போகச் சொல்கிறாள்....... !
மரணம் உன் மடியில் என்றவள் - இப்போது
மறந்து போகச் சொல்கிறாள்....... ! !
இதயத்திற்குள்
இடிதாக்கியது போல்
இப்போது எனக்கு உணர்வு....... !
என் உதடுகளோ பேசத்தெரியாமல்
ஊமையாகி நின்றது....... !
கண்கள்
கண்ணீர்த் துளிகளாய் பேசியது....... !
விளக்கம் சொல்ல
விரும்பவில்லை அவள்......... !
விலகி நடக்க தொடங்கினாள்....... ! !
தூரத்தில் அவள்
புள்ளியாய் மறையும் வரை
அவளை பார்த்து நின்றேன் நான்........ !
என் கால்களோ
எனக்கே தெரியாமல்
ஆழ்கடலை நோக்கி
பயணமானது........ ! !
அன்றிலிருந்து இரண்டாவது நாள்........
அவள் வீடு........
அன்றைய நாளிதளை
அவள் புரட்டிக்கொண்டிருந்தாள்... ..... !
அதன் ஆறாவது பக்கம்........
கடற்கரையோரம்
அடையாளம் தெரியாத
ஆண் பிணம்....... !
அருகில் என் புகைப்படம்....... ! !
அலறினாள் அவள்........ ! !
பார்த்தவள்
பதறியடித்துக்கொண்டு ஓடினாள்....... !
ஊரே கூடியிருக்க
உயிரில்லாமல் கிடந்தேன் நான்........ !
மூச்சு நின்று
மூன்று நாட்களாயிருந்தது......... !
அரை மணி நேரத்தில்
அங்கு வந்தாள் அவள்........ !
உயிரில்லாத என்னைக்கண்டு - அவள்
உடலே நடுங்கியது........ !
கட்டிப்பிடித்து
கதறினாள் அவள்....... !
ஆசையிருந்தும்
ஆறுதல் சொல்ல முடியாமல் நான்........ !
மரித்துக்கிடந்த என்னிடம்
மறந்துவிட சொன்னதற்காய்
மன்னிப்புக்கேட்டாள்....... !
என்னை கட்டி அணைத்தபடி
விட்டுப்போகாதே என அழுதாள்......... !
எனக்கே தெரியாத
ஏதோ ஓரிடத்திலிருந்து
நடப்பதையெல்லாம்
வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த நான்
எனக்குள் நினைத்துக்கொண்டேன்........ !
ஓ...... கடவுளே....... !
இந்த ஜென்மம் முழுவதும்
இவளோடு வாழ
நான் உயிரோடிருந்திருக்க கூடாதா...... ! ! !
மணி ஐந்து....... !
கடல் மீது கொண்ட காதலால்
கடற்கரையை கட்டியணைத்துக் கொண்டிருந்தது....... !
கடல் அலை.......
அந்த கடற்கரையோரம்
அவளுக்காய் காத்திருந்தேன்....... !
நான்......
எப்போதும் எனக்கு முன்னே வந்து
எனக்காக காத்திருப்பவளை
இன்று ஏனோ - நான் வந்து
20 நிமிடமாகியும் காணவில்லை....... !
யோசித்துக்கொண்டிருந்த
அடுத்த ஐந்தாவது நிமிடத்தில்
அவள் வந்தாள்....... !
முழு நிலவாய் மின்னும் - அவள்
முகத்தில் இன்று
பிறை நிலவாய் ஏதோ.......
குறை தெரிந்தது....... !
என் பக்கத்தில் அமர்ந்து
பல கதைகள் சொல்பவள்......
இன்று ஏனோ
இடைவெளி விட்டு நின்றாள்....... !
எல்லாமே
எனக்கு புதிதாயிருந்தது........ !
அவள் முகத்தையே
பார்த்து நின்றேன்........ !
அவள் கண்களுக்குள்
கண்ணீர்த்துளி....... !
என் இதயம் இப்போது
மௌனமாய் அழுதது....... !
கண்ணீர்த் துளிகளுக்கு
காரணம் கேட்டேன்........ !
மௌனமே பதிலாய் கிடைத்தது........ ! !
இன்னொருமுறை கேட்டேன்.......!
இப்போதும் மௌனமே பதிலானது........ ! !
அரைமணி நேரம்
அதே மௌனம்....... !
அதற்குள் ஆயிரம் முறை செத்துப்பிழைத்தது........ ! !
என் இதயம்........
அரைமணி நேரம் கழித்து
அவள் வாய் திறந்தாள்........ !
என்னை நீ
மறந்துவிடு என்றாள்....... !
மறுத்தேன் நான்....... !
நீ தான் என் உயிர் என்றவள் - இப்போது
நீங்கிப்போகச் சொல்கிறாள்....... !
மரணம் உன் மடியில் என்றவள் - இப்போது
மறந்து போகச் சொல்கிறாள்....... ! !
இதயத்திற்குள்
இடிதாக்கியது போல்
இப்போது எனக்கு உணர்வு....... !
என் உதடுகளோ பேசத்தெரியாமல்
ஊமையாகி நின்றது....... !
கண்கள்
கண்ணீர்த் துளிகளாய் பேசியது....... !
விளக்கம் சொல்ல
விரும்பவில்லை அவள்......... !
விலகி நடக்க தொடங்கினாள்....... ! !
தூரத்தில் அவள்
புள்ளியாய் மறையும் வரை
அவளை பார்த்து நின்றேன் நான்........ !
என் கால்களோ
எனக்கே தெரியாமல்
ஆழ்கடலை நோக்கி
பயணமானது........ ! !
அன்றிலிருந்து இரண்டாவது நாள்........
அவள் வீடு........
அன்றைய நாளிதளை
அவள் புரட்டிக்கொண்டிருந்தாள்...
அதன் ஆறாவது பக்கம்........
கடற்கரையோரம்
அடையாளம் தெரியாத
ஆண் பிணம்....... !
அருகில் என் புகைப்படம்....... ! !
அலறினாள் அவள்........ ! !
பார்த்தவள்
பதறியடித்துக்கொண்டு ஓடினாள்....... !
ஊரே கூடியிருக்க
உயிரில்லாமல் கிடந்தேன் நான்........ !
மூச்சு நின்று
மூன்று நாட்களாயிருந்தது......... !
அரை மணி நேரத்தில்
அங்கு வந்தாள் அவள்........ !
உயிரில்லாத என்னைக்கண்டு - அவள்
உடலே நடுங்கியது........ !
கட்டிப்பிடித்து
கதறினாள் அவள்....... !
ஆசையிருந்தும்
ஆறுதல் சொல்ல முடியாமல் நான்........ !
மரித்துக்கிடந்த என்னிடம்
மறந்துவிட சொன்னதற்காய்
மன்னிப்புக்கேட்டாள்.......
என்னை கட்டி அணைத்தபடி
விட்டுப்போகாதே என அழுதாள்......... !
எனக்கே தெரியாத
ஏதோ ஓரிடத்திலிருந்து
நடப்பதையெல்லாம்
வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த நான்
எனக்குள் நினைத்துக்கொண்டேன்........
ஓ...... கடவுளே....... !
இந்த ஜென்மம் முழுவதும்
இவளோடு வாழ
நான் உயிரோடிருந்திருக்க கூடாதா...... ! ! !

No comments :
Post a Comment